Skip to main content
  குறை நிவர்த்தி : + 044-4567 4567 (24x7)
TN Logo CM Photo
Minister Photo CMWSSB Logo

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளுக்கான பராமரிப்பு குறிப்புகள்

  • மழைநீர் சேகரிப்பு அமைப்பபின் சுற்றுப்புறங்களை எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருங்கள்.
  • மழைக் காலத்திற்கு முன் கூரை ஓடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் தாள்களில் உள்ள பாசிகளை அகற்றவும்.
  • மழைக் காலத்திற்கு முன் தொட்டியை முழுவதுமாக காலி செய்து, உள்ளே நன்றாக சுத்தம் செய்யவும்.
  • மழைக் காலத்திலும், பருவமழைக்கு முன்பும் நீர்க் கால்வாய்களை அடிக்கடி சுத்தம் செய்யவும்.
  • மழையின் தீவிரத்தைப் பொறுத்து 15 அல்லது 20 நிமிட மழையைத் தவிர்க்கவும். இந்த மழைநீரை வெளியேற்ற முதல் நிலை வடிகட்டி ஏற்பாட்டைப் பயன்படுத்தவும்.
  • ஒவ்வொரு மழைக் காலத்திலும் வடிகட்டி அமைப்பை மாற்றவும்.
  • மழை இல்லாத காலங்களில் பூச்சிகள், புழுக்கள் மற்றும் கொசுக்கள் நுழைவதைத் தவிர்க்க, அனைத்து நுழைவாயில் மற்றும் வெளியேறும் குழாய்களையும் நெருக்கமாகப் பின்னப்பட்ட நைலான் வலை அல்லது மெல்லிய துணி அல்லது தொப்பியால் மூடவும்.
  • அமைப்பில் இருந்து 5 லிட்டர் / நபர் / நாள் என்ற விகிதத்தில் தண்ணீரை எடுக்கவும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை காலம் முழுவதும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும்.
  • வலைக்காரை சேமிப்பு தொட்டியில் விரிசல் கசிவு ஏற்பட்டால் உடனடியாக சிமென்ட் பூசுவதன் மூலம் சரி செய்ய வேண்டும். இது விரிசல்களின் பரவல் காரணமாக பெரிய பழுதுகளைத் தவிர்க்கும்.
  • மூடியின் மீது அதிக சுமைகளை செலுத்தக்கூடாது, குறிப்பாக பல நபர்கள் மூடியின் மீது நிற்கக்கூடாது.
  • சேகரிப்பு குழியில் தண்ணீர் தேங்கவிடக் கூடாது.
  • குழாயில் பூட்டு அமைப்பு இருக்க வேண்டும், இதனால் தண்ணீர் திருடுவது அல்லது வீணாவது தவிர்க்கப்படும்.
  • வடிகட்டி பொருட்களை வடிகட்டி வாளிகளுக்கு மாற்றுவதற்கு முன் நன்கு கழுவ வேண்டும்.
  • வடிகட்டி அலகில் உள்ள தேங்காய் நாரை மழைக் காலத்தில் மாற்ற வேண்டும். ஏனெனில், ஈரமான நிலையில் அது அழுகி நீரின் தரத்தை கெடுத்துவிடும்.
  • கடலோரப் பகுதிகளில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிப்பைத் தடுக்கும் வகையில் தொட்டிக்கு வெளிப்புறம் வர்ணம் பூசலாம், மற்ற பகுதிகளில் சுண்ணாம்பை (கால்சியம்கார்பனேட்) அழகுக்காக மட்டுமல்ல, தூய்மைக்காகவும் பயன்படுத்தலாம்.

மேற்கூறிய உதவிக் குறிப்புகளை வழங்கி படங்கள், கையேடுகள் மற்றும் சுவர்சுவரொட்டிகள் கொடுப்பதன் மூலம் அமைப்பை பராமரிப்பதைப் பற்றி மக்கள் கல்வியறிவு பெறலாம். அமைப்புகளை முறையாகப் பராமரிப்பதில் பயனர்களைக் கண்காணித்து ஊக்குவிப்பதற்காக திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் கட்டமைப்புகளைப் பார்வையிட வேண்டும். மேற்கூரை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளின் பராமரிப்பு அம்சங்கள் குறித்து பயனர்களிடையே முறைசாரா குழுவிவாதங்கள் இருக்கக்கூடும். முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக, தண்ணீர் சேமிப்பு தொட்டியில் இருந்து வரும் தண்ணீரிலும் நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்கள் இருக்கிறதா என்று சோதிக்கலாம் . ஆனால் கிராமப்புற குடும்பங்கள் தண்ணீர் மாதிரிகளை சேகரித்து, அருகிலுள்ள மாவட்ட மையத்தில் தொடர்ந்து பரிசோதனை செய்வது நடைமுறைக்கு சாத்தியமில்லை. எனவே, அமைப்புகளின் கட்டுமானத்தின் உடனடி தொடர்ச்சியாக இந்த பணியை செயல்படுத்தும் நிறுவனம் மேற்கொள்ளலாம். அமைப்பை பராமரிப்பதில் பயனர்களின் கவனத்தையும், பல்வேறு பராமரிப்பு அம்சங்களில் கொடுக்கப்பட வேண்டிய விழிப்புணர்வையும் கண்டறிய நிறுவனங்களுக்கு இது உதவுகிறது. பின்வரும் பகுதியானது சோதனை மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்கான நீர் மாதிரிகளை சேகரிப்பது பற்றி ஒரு யோசனையை வழங்குகிறது.

விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள்

  • மழைநீர் சேகரிப்பு முன்மொழியப்பட்டால்மட்டுமே CMDA அடுக்குமாடி கட்டிடங்கள்/ உயர் அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்டமிடல் அனுமதியை ஒப்புக்கொள்ள வேண்டும்.
  • இப்போது அளவு வித்தியாசமில்லாமல்அனைத்து புதிய கட்டிடங்களுக்கும் சென்னை மாநகராட்சி உரிமம் வழங்க மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டுமான முன்மொழிவு வேண்டும்.
  • புதியநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தை அணுகும் போது அனைத்து கட்டிடங்களுக்கும் (அளவு மற்றும் பரப்பளவைப் பொருட்படுத்தாமல்) மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
  • மேலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உரிமையாளர் / குடியிருப்பவர்களால் முறையாகப் பராமரிக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் அவற்றைப் கைவிடக் கூடாது என்றும் உரிமையாளரால் அறிவிக்கப் பட வேண்டும்.
Back