Skip to main content
  குறை நிவர்த்தி : + 044-4567 4567 (24x7)
TN Logo CM Photo
Minister Photo CMWSSB Logo

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

.

முடிவெடுப்பது/குறைகளைத் தீர்ப்பது தொடர்பாக பொதுமக்களுடன் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடு ( பிரிவு 4 (1) (b)(viii)

  • பொதுமக்களுடைய குறைகளை நேரடியாக கேட்கும் விதமாக திறந்த வெளி கூட்டங்கள் எல்லா மாதங்களிலும் இரண்டாவது சனிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 15 பகுதி அலுவலகங்களிலும் வாரியத்தால் நடத்தப்படுகிறது.
  • பொதுமக்கள், அனைத்து தன்னார்வ அமைப்புகள், நுகர்வோர் செயல் அமைப்புகள் நல வாழ்வு சங்கங்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் செயல்படும் விருப்பமுடைய அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்த திறந்த நிலை கூட்டங்களுக்கு பத்திரிக்கை செயலிகள் மூலம் அழைக்கப்படுவார்கள்.
  • திறந்த நிலை கூட்டங்களுக்கு வாரியத்தின் உயர் அதிகாரிகள் (மேற்பார்வை பொறியாளர்) தலைமையில் நடத்தப்படுகிறது.
  • திறந்த நிலை கூட்டங்கள் மூலம் பங்கேற்கும் பொது மக்கள்/ நுகர்வோர்கள் அலுவலர்களை சந்தித்து நேரில் தங்களது குறைகளை தெரிவிக்க இயலும்.
  • திறந்தவெளி கூட்டங்கள் நடத்தப்படுவதால் கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்களது கருத்துக்கள், மற்றும் தேவையான இடங்களில் பணி ஆற்றலை மேம்படுத்துவதற்கு ஆலோசனைகளை வழங்க இயலும்.
  • திறந்தவெளி கூட்டங்களில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டு, அங்கு பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது.